என்.ஹச்.பி.ராஜராஜன் 1983ம் ஆண்டு மார்ச்சு மாதம் 4 ம் நாள் கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தார்.இவருடைய தந்தையார் சு.நடராஜன் ,தாயார் என்.ஹேமலதா ஆவார்.இவர் தன்னுடைய இசை பயிற்சியை அய்யன்பாறவிளை ஜி.கிருஷ்ணன் என்பவரிடம் கற்றார்.இசையில் மேலும் புலமை பெறவேண்டி லயவாத்யசிரோன்மணி வி.சுரேஷ் அவர்களிடம் மாணவராக சேர்ந்து இசையின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டார்.மேலும் இவர் அண்ணாமலை பல்கலை கழகத்தில் இளங்கலை இசையியலிலும் ,திருபுனித்துரா(கேரளா) ஆர்.எல்.வி இசையியல் கல்லூரியில் முதுகலை இசையியலிலும் பட்டம் பெற்றிருக்கிறார்.ஆல் இந்திய ரேடியோவின் பி ஹை கிரேடு கலைஞராக தகுதிபெற்று பல இசை நிகழ்சிகளை ரேடியோவில் நிகழ்த்தியுள்ளார்.
இவரைப்பற்றிய என் எண்ணங்கள்
என் .ஹச்.பி.ராஜராஜன் ஒரு சிறந்த கடம் இசைக்கலைஞர் ஆவார்.என்னுடைய சிறுவயதிலிருந்தே இவரை எனக்கு தெரியும்.இவர் அசுர சாதகம் செய்து இந்த உன்னத நிலையை அடைந்திருக்கிறார்.இவருடைய கச்சேரிகளை கேட்டுப்பாருங்கள் அப்போது தெரியும் இவருடைய ஆத்மார்த்தமான இசை உங்கள் இதயத்தோடு இணைந்து துடிப்பதை.நான் மிகைபடுத்தவில்லை வேண்டுமானால் அடுத்த டிசம்பர் சீசனில் இவர் வாசிக்கும் கச்சேரிகளை கேட்டுப்பாருங்கள் அப்போது தெரியும் நான் சொன்னது மிகையல்ல என்று.அவர் இசையில் பல சாதனைகள் புரிந்து நீடூடி வாழ என் வாழ்த்துகளை இந்த மயிலஞ்சலில் பதிவு செய்கிறேன்.
நன்றி:சு.த.இராதாகிருஷ்ணன்
No comments:
Post a Comment